awisosplschool

awisosplschool

புதன், 6 ஏப்ரல், 2011

தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் புகாரா?தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கலாம்

தேர்தல் புகார்கள் குறித்து தேர்தல் பார்வையாளர்களிடம் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பார்வையாளர்கள் (பொது) திருவிடைமருதூர், கும்பகோணம் தொகுதிக்கு பி.ஆர்.சமால் (மொபைல் எண்: 7598700198) நியமிக்கப்பட்டுள்ளர். இவர் கும்பகோணம் குடிநீர் வடிகால் வாரிய விருந்தினர் இல்லம் அறை எண் 1ல் உள்ளார்.
பாபநாசம், திருவையாறுதொ குதிகளுக்கு டி.ஓ.சூரஜ் (75987 00199) நியமிக்கப்பட்டு தஞ்சை புதிய ஆய்வு மாளிகை அறை எண் 3ல் உள்ளார். தஞ்சை, ஒரத்தநாடு தொகுதிகளுக்கு பிரகாஷ் எம்.மகாஜன் (7598700200) நியமிக்கப்பட்டு, தஞ்சை புதிய ஆய்வு மாளிகை அறை எண் 1ல் உள்ளார். பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளுக்கு ராணிகுமுதினி (7598700201) நியமிக்கப்பட்டு, பட்டுக்கோட்டை நெடு ஞ்சாலைத்துறை பயணியர் மா ளிகையில் உள்ளார். கணக்கு தணிக்கைக்கான பார்வையாளர்கள் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு தொகுதிக்காக ஷியாம்குமார் (7598700202) நியமிக்கப்பட் டு, தஞ்சை புதிய சுற்றுலா மாளி கை அறை எண் 4ல் உள்ளார். தஞ்சை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிக்கான பார்வையாளர் மனோஜ்குமார் (7598700203) நியமிக்கப்பட்டு, தஞ்சை புதிய சுற்றுலா மா ளிகை அறை எண் 5ல் உள்ளார். மாவட்டம் முழுமைக்கான காவல் பார்வையாளர் அனில்குமார் (7598700090) நியமிக்கப்பட் டு தஞ்சை புதிய ஆய்வு மாளிகை அறை எண் 3ல் உள்ளார். தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் சட்டசபை தேர்தல் ப ணிகள் முடியும் வரை இந்த மு கவரியில் தங்கி இருந்து தேர்தல் நடத்தைகளை கண்காணிக்க உள்ளனர். அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தேர்தல் ஆணைய பார்வையாளர்களை தேர்தல் தொடர்பான புகார்களை குறிப்பிட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். ஒவ்வொரு நாளும் காலை 9.30 மணிக்குள் நேரில் சந்தித்தும் தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கலாம். மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு பிரிவு (அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும்) இலவச அழைப்பு எண்கள் 1800425703/1077, நிகரி எண் 04362 230857, இணையதள முகவரி deotnj@gmail.com, தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம், என கலெக்டர் சண்முகம் கேட்டுக் கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக